அழகான உறவுகள்,அவர்களின் நினைவுகள் ஏற்படுத்தும் உணர்வுகள் இன்னும் அழகானவை.
1999ல் ஊர் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறும்
ஊரே அய்யனார் கோவிலில் தான் இருந்தது. வழக்கம் போலவே நான் தூங்கியிருந்தேன். என் வீட்டின் கதவை தட்டும் சத்தம் அறிந்து, யாரு என்று கேட்டுகொண்டே திறந்ததும், என் பக்கத்துக்கு வீட்டு பாட்டி ஒரு பெண்ணுடன் வாசலில்
" தம்பி உன் தங்கச்சி இருந்தா , என் பேத்திய கோவிலுக்கு கூட்டிட்டு போ சொல்லுப்பா, இவ அம்மா முன்னாடியே போய்ட்டா"
" தெருவே ஒரே இருட்டா இருக்கு, போறதுக்கு பயப்படறா"
என்னை தவிர்த்து வீட்டில் யாரும் இல்லை. அந்த பெண்ணும் வெளியூர் போல் தெரிந்தது , திருவிழாவிற்கிறென வந்தவள்.நாமே போகலாம் என நினைத்து, பாட்டியிடம் " பாட்டி நீங்க வீட்டுக்கு போங்க, எங்க பாப்பாவ கூட போக சொல்றேன்".
பாட்டி சென்றதும் அந்த பெண்ணிடம் " சாரிங்க எங்க பாப்பாவும் முன்னாடியே கோவிலுக்கு சாமி பாக்க போய்ட்டா, நான் கொண்டு வந்து விடுறன்"
அவளும் சிரித்துக் கொண்டே
" போன மாசம் உங்களுக்கு அம்மை போட்டுச்சுன்னு என் அம்மா சொன்னாங்க , இப்ப சரியாகிடுச்சா"
அவளிடம் " உங்க பேரு, சத்யா தானே"
அவளும் புருவம் உயர்த்தி "மறக்கல போல இன்னும், சந்தோசமா இருக்கு"
எண்ணங்கள் பின்னோக்கி என்னை இழுத்து போனது, சிறு வயது முதல் திருவிழா என்றால் என் ஊரு வந்து விடும் அவர்களது மொத்த சொந்தமும்.அப்போதெல்லாம் அவளுடன் நட்பு இருந்திருக்கிறது. இப்போது அவளின் மாற்றம் அவளின் அடையாளமே மாறிபோய் விட்டது.
நடக்க தொடங்கினோம், நிலவு என் இடது புறமும், நிலவுக்கு போட்டி போட்டு அவள் என் வலது புறமுமாய் நடந்தோம்.
அவள் வலது கைகளை காட்டி
" உங்க புக்ஸ் எடுத்து நான் பாத்தப்போ, உங்க கையில இருந்த கம்பியால அடிச்ச காயம் இது. இன்னும் தழும்பு அப்டியே இருக்கு, அவ்வளவு கோபம் உங்களுக்கு"
அவள் கைகளை பிடித்து கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.
" மன்னிசுடுங்க தெரியாம பண்ணிருப்பேன் "
" அதெல்லாம் ஒன்னும் வேணாம், "
தொடரும்...
1999ல் ஊர் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மொத்தம் எட்டு நாட்கள் நடைபெறும்
ஊரே அய்யனார் கோவிலில் தான் இருந்தது. வழக்கம் போலவே நான் தூங்கியிருந்தேன். என் வீட்டின் கதவை தட்டும் சத்தம் அறிந்து, யாரு என்று கேட்டுகொண்டே திறந்ததும், என் பக்கத்துக்கு வீட்டு பாட்டி ஒரு பெண்ணுடன் வாசலில்
" தம்பி உன் தங்கச்சி இருந்தா , என் பேத்திய கோவிலுக்கு கூட்டிட்டு போ சொல்லுப்பா, இவ அம்மா முன்னாடியே போய்ட்டா"
" தெருவே ஒரே இருட்டா இருக்கு, போறதுக்கு பயப்படறா"
என்னை தவிர்த்து வீட்டில் யாரும் இல்லை. அந்த பெண்ணும் வெளியூர் போல் தெரிந்தது , திருவிழாவிற்கிறென வந்தவள்.நாமே போகலாம் என நினைத்து, பாட்டியிடம் " பாட்டி நீங்க வீட்டுக்கு போங்க, எங்க பாப்பாவ கூட போக சொல்றேன்".
பாட்டி சென்றதும் அந்த பெண்ணிடம் " சாரிங்க எங்க பாப்பாவும் முன்னாடியே கோவிலுக்கு சாமி பாக்க போய்ட்டா, நான் கொண்டு வந்து விடுறன்"
அவளும் சிரித்துக் கொண்டே
" போன மாசம் உங்களுக்கு அம்மை போட்டுச்சுன்னு என் அம்மா சொன்னாங்க , இப்ப சரியாகிடுச்சா"
அவளிடம் " உங்க பேரு, சத்யா தானே"
அவளும் புருவம் உயர்த்தி "மறக்கல போல இன்னும், சந்தோசமா இருக்கு"
எண்ணங்கள் பின்னோக்கி என்னை இழுத்து போனது, சிறு வயது முதல் திருவிழா என்றால் என் ஊரு வந்து விடும் அவர்களது மொத்த சொந்தமும்.அப்போதெல்லாம் அவளுடன் நட்பு இருந்திருக்கிறது. இப்போது அவளின் மாற்றம் அவளின் அடையாளமே மாறிபோய் விட்டது.
நடக்க தொடங்கினோம், நிலவு என் இடது புறமும், நிலவுக்கு போட்டி போட்டு அவள் என் வலது புறமுமாய் நடந்தோம்.
அவள் வலது கைகளை காட்டி
" உங்க புக்ஸ் எடுத்து நான் பாத்தப்போ, உங்க கையில இருந்த கம்பியால அடிச்ச காயம் இது. இன்னும் தழும்பு அப்டியே இருக்கு, அவ்வளவு கோபம் உங்களுக்கு"
அவள் கைகளை பிடித்து கொண்டு அழ வேண்டும் போலிருந்தது.
" மன்னிசுடுங்க தெரியாம பண்ணிருப்பேன் "
" அதெல்லாம் ஒன்னும் வேணாம், "
தொடரும்...